யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Surrey ஐ வதிவிடமாகவும் கொண்ட ரமணி கார்த்திகைசெல்வன் அவர்கள் 03-02-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், கனகசிங்கம் இராமநாதன்(ஓய்வுபெற்ற பொறியியலாளர்- பிரித்தானியா லண்டன்), காலஞ்சென்ற செல்வமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆறுமுகம் கார்த்திகைசெல்வன் அவர்களின் அன்புத் துணைவியும்,
ஆகாஷ், மீரா, கிரிஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மலர்வதனி(Buby) பிரசன்னா, உமாகாந்தன் இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரசன்னா அவர்களின் அன்பு மைத்துனியும்,பிரவீன், அஸ்வின் ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.