யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி திரேசா யேசுதாசன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தாயே
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அணையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் மம்மி
ஐந்து ஆண்டுகள் உருண்டு ஓடினாலும்
உங்கள் அன்பு நினைவுகளுடன்...
உங்கள் ஆன்மா சமாதானத்தில்
இளைப்பாற வேண்டி நிற்கும்
பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்