யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுந்தரலிங்கம் மதியழகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு கடுகதியில் கரைந்தோடிச் சென்றாலும் – உங்கள்
நினைவுகள் கல் மேல் பொறித்த எழுத்துக்கள் போல்
எங்களை விட்டு அகலவில்லை அப்பா!!
மீண்டும் நீங்கள் வருவீர்கள் என வழி பார்த்திருந்தோம்
விண்மீன்களாய் தான் தெரிகின்றீர்கள் அப்பா!!
அப்பா எங்கள் இன்ப துன்பங்களை – நீங்கள்
அருகில் இருந்து பங்கெடுத்து கொள்வதை
நாம் உணர்கின்றோம் அப்பா!!
ஆண்டுகள் பல கடந்தாலும்
காலமெல்லாம் வரைந்து வைத்த ஓவியமாய்
எங்களுடனே வாழ்ந்திடுவீர்கள்
எங்கள் இதயம்தான் உங்கள் இருப்பிடம்
மீண்டும் நீர் வரமாட்டீரா
என்று ஏக்கத்தோடு வாழ்கின்றோம்
உம்மை நினைத்தே நாமிங்கு வாழ்கின்றோம்
உத்தமரே பெற்றிடுக சாந்தி எம் வாழ்வில்
நீங்கள் இல்லை என்ற எண்ணம் எமக்கில்லை
வாழ்வீர் எம்மனதில் நாம் வாழும் காலம்வரை!
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்