யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தென்மூலையை வதிவிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சவரிமுத்து நீக்கிலாப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களுக்கு உயிர் தந்து
காத்த அன்புத் தெய்வமே!
அப்பா நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
ஆண்டு ஒன்று சென்றாலும்
எங்கள் நினைவில்
எப்போதும் வாழ்கின்றீர்கள்
உதிரத்தில் உருவாக்கி
உலகத்தில் எமைத் தாங்கி
உலாவ வைத்த உத்தமனே
ஆண்டுகள் பல கடந்தாலும் என்றும்
எம் வாழ்வோடு இருப்பீர்கள் அப்பா
அடிக்கும் காற்றிலும்
பார்க்கும் திசையிலும்
உங்கள் முகம் தெரியவில்லை அப்பா
மீண்டும் ஒருமுறை வந்து
எங்களுக்கு தந்தையாய் பிறப்பீர்களா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!