யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy-ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த றிச்சேட் பேபி சறோஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு;
அந்தப் பாதையில் மரணம் இல்லை
நீதிமொழிகள் 12: 28
மண்ணைவிட்டு நீ சென்று
நீ வென்ற மனங்களை விட்டு
சென்றிடத்தான் முடியுமோ அம்மா
மரணிக்க வில்லையம்மா நீரிப்போ
மெளனமாய் உறங்குகிறீர் கண்மூடி
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா
மீண்டும் நீ வாருமம்மா
ஓராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
மறவோம் நாம் உன் அன்பு முகம்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!