யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மன்னார் புதுக்குளம், பிரித்தானியா, மன்னார் சின்னக்கடை ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்டிருந்த கார்த்திகேசு இராசு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும்
அனைவரையும் அரவணைத்த
எம் அன்புத்தெய்வமே!
ஆயிரம் ஜென்மம் எடுத்து பிறந்தாலும்,
அம்மா உங்கள் கருவறையில்
மீண்டும் பிறக்கின்ற வரம் வேண்டும்!
என்றும் எங்களின் இறைவியாய்
எங்களை வழிநடத்த
வணங்குகின்றோம் அம்மா
உங்கள் அன்பு வாழ்த்துக்கள்
எங்கிருந்தாலும் எங்களுக்கு
கிடைக்க அருள் வழங்குங்கள் அம்மா!
ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்,
அன்பான நினைவுகள் என்றும்
எங்களை விட்டு மறையாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
நீங்காத நினைவுகளுடன் குடும்பத்தினர்
தகவல் : பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் கொப்பாட்டுப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.