யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகலிங்கம் ஞானசேகரன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இருபது ஆனதுவோ
உன் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உன் இழப்பை
எங்கள் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ...
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும்
உன் நிலவு முகம் தேயாதடா!
எங்களை தவிக்க விட்டு
நீர் தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண
வருவாயா ஓர் கணமே?
பிறந்து விட்டோம் இம்மண்ணில்
இறுதிவரை வாழ்வோம் நீ
விட்டுச் சென்ற நீங்காத நினைவுகளோடு...
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்..