யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சாள்ஸ் இரட்ணராசா அவர்கள் 29-12-2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா(ஓவசியர்) லில்லி பவளம் தம்பதிகளின் அன்பு மகனும்,
வேதநாயகி(வேதா) அவர்களின் அன்புக் கணவரும்,
லில்லி டிலானி(பிரான்ஸ்), பிலிப், தர்மபாலன்(பிரான்ஸ்), ஏனஸ்ட் சஞ்சீவ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆற்றுப்படுத்தல் ஆராதனை 07-01-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நுணாவில் அமெரிக்கன் சிலோன் மிஷன் தேவாலய நல்லாயன் மண்டபத்தில் நடைபெற்று அன்னாரின் அஸ்தி சாவகச்சேரி தென்னிந்திய திருச்சபை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.