யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நடராசா அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஞானகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,சிந்து, வைகை, சத்தியேந்திரா, யுகேந்திரா, சனேந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டினேஸ், றமணா, ஜீவிதா, சாலினி, தனேஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவின், பிரணிதா, கஸ்வின், அதித்ரி, தெய்வின், அகரன், தாமிரன், பிரஜீன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சந்திரசேகரம்பிள்ளை பொன்னம்மா, பூபாலசிங்கம் மயில்வாகனம், யூகராசா, கணபதிப்பிள்ளை குகநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விமலட்சுமி, மருதலிங்கம், காலஞ்சென்ற விஜயலட்சுமி, பத்மினி, சாந்தினி, தயாநிதி, வனஜா, விமலாதேவி, தயாளன் குகதாசன், நிர்மலா, சிவனேசன், மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2022 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.