முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதம் சாரங்கன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.எங்கள் அன்புச் சகோதரனே உன்னை
இழந்துவிட்டோம் அது உண்மைதான்....
எங்களின் நினைவுகளைக் கூடவெறும்...
நினைவுகளாகவே துளைத்து விட்டோம்....
சகோதர பாசம் என்பதற்கு
இலக்கணமாய் வாழ்ந்தீர்களே!
உள்ளன்போடு உறவுகளுடன்
உறவுகொண்டாடி மகிழ்ந்தீர்களே!
உங்கள் பிரிவால் நாமனைவரும்
துயரக்கடலில் மூழ்கித் தவிக்கின்றோம்.
இப்போது தேடுகின்றோம் உன்
எதிர்காலத்தையல்ல..
உன்னுடைய இறந்த கால நினைவுகளையே
இனி ஏதும் பயனேதுமில்லை...
உமது ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!