மீசாலையைப் பிறப்பிடமாகவும் கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் இராசையா அவர்கள் 03.03.2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்னரியம், அருளம்பலம், நல்லம்மா ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற வசந்திராதேவி மற்றும் சிவலிங்கம்(சுவிஸ்), தனேஸ்வரி(தாதிய உத்தியோகத்தர் - யாழ் போதனா வைத்தியசாலை), குணபாலசிங்கம் (சுவிஸ்), தனலட்சுமி, தயானந்தி, சசிகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தசாமி, வசந்தராணி (சுவிஸ்), மனோ கரன், விமலநயனா (சுவிஸ்), கமலீஸ்வரன் (யாழ்.போதனா வைத்திய சாலை ஊழியர்), யோகராசா, சுமதி ஆகியோரின் அன்பு மாமியும்,
சபிதா தேவி (பிரான்ஸ்), சசிரேகா (பிரான்ஸ்), சுரேஸ் (லண்டன்), ராகுலன் (சுவிஸ்), லவன் (சுவிஸ்), நிலவன் (சுவிஸ்), தமிழினி (சுவிஸ்), புதியவன் (சுவிஸ்), புவிதாயினி, புவியந்தன், கௌரிசங்கர், பூர்வஜா, நிதுசிகா, யோகேந்திரன் (பிரான்ஸ்), ஸ்ரீ பாலவேந்தன் (பிரான்ஸ்), நவதர்சினி (லண்டன்), சுஜிதரன், நடினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,
சங்கவி, கிசாளினி, தயிபன், துவாரகா, வசந், கிசானி, கிசோமி, ஆதிஸ், அபினாஸ், டர்னிகன், சபேசன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அன்று 05.03.2020 வியாழக்கிழமை இல.46, நெடுங்குளம் வீதி, கொழும்புத்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பி.ப 2.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.