யாழ். அன்னச்சத்திர ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கேதீஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-11-2021
ஆண்டு ஓன்று ஆனாலும்!
அழியவில்லை எம் சோகம்!
மாதங்கள் பன்னிரண்டு என்ன?...!
யுகங்கள் பன்னிரண்டு ஆனாலும்!
மாறாது எம் துயர் மறையாது உங்கள் நினைவு..!
கண் நிறைந்த நீரோடு...!
உம் கனவு சுமந்த நெஞ்சோடு...!
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்!
எங்கு சென்றாய்....?
நீங்கள் எம்மை விட்டு
சென்று ஒரு வருடம்
முடிந்ததை எம்மால்
இன்னும் நம்பமுடியவில்லை..
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
கண்ணுக்குள் உம்மை வைத்து
காலமெல்லாம் போற்றி நிற்போம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!