யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஸ்கொட்லாந்து Glasgow ஜ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிநாதன் கமலநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
உள்ளம் எல்லாம் உன்
நினைவுகளை மறக்காமல்
தந்துவிட்டு மாயமாய்
மறைந்து சென்றாயே!
உங்கள் அன்பை போல
மற்றொரு அன்பை இந்த உலகில்
வேறு எங்கு தேடுவோம்
எங்குமே வியாபித்திருக்கும்
தன்னலமற்றது உன் அன்பு
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றிருந்தோம்!
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய்
உன்னைப்போல் அன்பு காட்ட
யாரும் இல்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
குடும்பத்தினர்