யாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த தளையசிங்கம் இராசலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பில் நிறைந்த ஒளிவிளக்கே
கண் இமைக்கும் நேரத்திலே
காலன் உன்னை கவர்ந்தானே
எங்கள் அன்புத்தாயே....
ஒரு வருடம் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை அம்மா…
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் போல் ஆகிடுமா! அம்மா…
நீங்கள் எம்மை விட்டு நீங்கள்
பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா...
எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மாசாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...