யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், மருதனாமடத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த வில்வரெட்ணம் வைத்திலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-12-2021
ஓராண்டு ஒன்று ஆனாலும் மறையவில்லை எம் சோகம்
ஓராண்டு என்ன ஒரு யுகம்
சென்றாலும் ஆறாவது எம் துயரம்
அப்பா என்றவுடன் புன்னகைத்து மகிழ்வீர்கள்
ஆசைக்கு ஒரு மகனும்
நான்கு பெண்பிள்ளைகளுமாய்
ஐவரையும் நானிலம் போற்ற வளர்த்தெடுத்தாய் நன்றியுடன்
நாம் இதயமதில் சுமக்கின்றோம் ஆசைக்கு ஒரு மகனாய்
கடமை செய்ய காத்திருந்த வேளைதனில்
கொடூரக் கொரோணாவால் அடைபட்டோம் கனடாவில்
மாமா என்று அழைத்தாலும் மகளாக அரவணைத்து அன்பை சொரிந்த உங்கள் பாசம் மறைந்திடுமோ?
உறவென்றால் உயிராக மதிப்பீர்கள் இன்றும் என்றும் நினைவழியா வாழும்
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்