முல்லைத்தீவு கற்சிலைமடு நான்காம் கண்டத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சேச்வீதி வள்ளிபுனத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தம்பிராசா அவர்கள் 28-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், மனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வராசா, ரஞ்சிதமலர்(லண்டன்), யோகராஜ்(பிரான்ஸ்), ரஜனிமலர்(ஆசிரியை- இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோபாலகிருஷ்ணன்(கோபால்- லண்டன்), ஜெயராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்சிகன், தமிழினி, சதுசிகா, தரணிகா, ஜீவிதன், ராதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வள்ளிபுனம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.