யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் ஜோர்ஜ் அவர்கள் 03-06-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை சூசைப்பிள்ளை ஜோர்ஜ் மேரி அக்னஸ் ஜோர்ஜ் தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வி மதியழகி ஜோர்ஜ் (ஓய்வுநிலை ஆசிரியை, புனித பெனடிற் கல்லூரி கொழும்பு-13), காலஞ்சென்ற செல்வி டாக்டர் மனோகரி ஜோர்ஜ், திருமதி தயாபரி வசீகரராஜா (ஆசிரியை, புனித அன்னம்மாள் பாடசாலை, கொழும்பு-13), திருமதி மரியகலா அருள்நேசன் (கனடா), திருமதி மரியதர்ஷினி கிரிதரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசீகரராஜா (கொழும்பு), அருள்நேசன் (கனடா), கிரிதரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹிஷோனியா, அஷ்வின்யா, பிரின்ஸ், பிரவீணா, பிறிஸ்ஸிலா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.