யாழ். உரும்பிராய் பிறப்பிடமாகவும். லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் ஜெயஸ்ரீ அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உருவம் மறைந்தாலும்
உள்ளம் மறையாது
ஓராண்டு காலம்
உருண்டோடிப் போனாலும்
உன் நினைவுகள் என்றும்
எம்மை விட்டு நீங்காது
உன்னை காலனவன் கவர்ந்தது
காலத்தின் கொடுமையோ?
தொலைத்து விட்டுத் துடிக்கின்றோம்
நீ மீண்டும் வருவாயா என்று
அருகிலிருந்து ஆறுதல் தருவாய் என
நாம் இருக்கு நீ நிரந்தரமாய்
எம்மை பிரிந்து போனதை
எப்படி நாம் தாங்குவோம்?
உங்கள் ஆன்மா சாந்தி பெற இறைவனிடம் பிரார்த்திக்கும்
குடும்பத்தினர்