யாழ். உடுப்பிட்டி தெற்கு, பண்டகையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் குருநாதபிள்ளை(செல்வம்) அவர்கள் 19-6-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குருநாதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவகௌரி, சிவகுருநாதன் மற்றும் ஜெயகௌரி, விஜயகௌரி, காலஞ்சென்ற தயாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், மற்றும் பூவதாசன், ஜெகசோதி, சேகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சுப்பிரமணியம், தம்பிப்பிள்ளை, இராசதங்கம், தவநாயகி மற்றும் தில்லைநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இமையாளினி, ஜெசிந்தா, ஜெனோசன், ஜெசிதரன், தக்ஷிகா, திவாகர், அங்குசன், அமுதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-6-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 8:00 மணியளவில் வல்லை இந்துமயானத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.