யாழ். அராலி கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முருகையா சீதாலட்சுமி அவர்கள் 17-06-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் ஜெயராணி, யோகராணி, செல்வராணி, தர்மேந்திரன், காலஞ்சென்ற விஜயராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மணிசேகரன், கமால், பாலச்சந்திரன், ரவீன், மாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகசுந்தரம், காலஞ்சென்ற சரோஜினி தேவி, சிவாயணசுந்தரம், சிவயோகசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மயில்வாகனம், செல்லம்மா, தெய்வானை, சரஸ்வதி, செல்லத்துரை, ராஜேந்திரன், ரங்கநாதன், மாணிக்கவாசகர், நாகேஸ்வரி, அருமைதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.