யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வசிப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா ஐயாத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்போடு அரவணைப்பை
அள்ளி கொடுத்த எங்கள் அன்பு தெய்வமே
நீங்கள் மறைந்து இன்று ஆண்டொன்று ஆகியதே...
உம்மிடத்தை நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
உமக்கிணையாய் யாருமில்லையம்மா
ஒரு வருடம் மறைந்திடினும்
அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்
எம் உயிர் உள்ளவரை என்றும்
எங்கள் மனதில் மறையாது
நிலைத்திருப்பீர்கள் அம்மா
உங்கள் பிரிவால் துயருறும் ,
மகள்கள், மகன்கள், மருமகன்கள், மருமகள்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், பெறாமக்கள் மற்றும் உறவினர்கள்.