யாழ். இணுவிலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமாரலிங்கம் கணேஸ்வரி அவர்கள் 20.02.2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பத்தினியாரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கிரிஜா, மற்றும் அனுஷா, ஸ்ரீதர், வனஜா (ஜேர்மனி), கீதா, குருபரன் (பிரான்ஸ்), பதிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகவடிவேல், ஸ்ரீகரன் (ஜேர்மனி), ரகுநாதன், துஷானந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அம்பலவாணர், மற்றும் தவமலர்,சுந்தரராணி (பட்டு), சிவமலர் (மலர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குலத்துங்கம், இராசதுரை, சுப்பையா, திருநாவுக்கரசு, பொன்னம்மா, சந்திரவதனி, காலஞ்சென்ற தர்மசேனன் மற்றும் சண்முகநாதன், சிவலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
யதிஷா, லக்ஸ்மன் - ஸ்ரீகல்யாணி (கனடா), சேயோன், சசிவதனன், தமஸ்வினி, ஆதவன், ஆர்த்;திகன், கோசிகா, தனுசிகா, சரணியா, சரண், வல்லபை, தமிழ்க்கனி, அறிவழகன், ஆரபி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (21.02.2020) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் காரைக்கால் இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
வீட்டு முகவரி:-
கந்தசுவாமி கோவிலடி,
Dr. ரகுபதி வீதி,
1ம் ஓழுங்கை, இணுவில்.