ஜேர்மனி Mönchengladbach ஐ பிறப்பிடமாகவும், லண்டன் Bristol ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த காந்தசீலன் சண்முகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்றுடன் ஆண்டிரண்டு ஆனதே
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலியப்பா உன் இழப்பு!!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆசானாய்
என்றும் நீ இருப்பாய்யடா!!
உன் நினைவுகளுடனும்
நிழல்ப்படமாக இருக்கும் உன்னை
நித்தமும் நினைத்து வாழ்ந்திடுவோம்
மண்ணிலிருந்து நீ மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்வாய்யடா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல் : வாகீசன், பரீஸ் மாமா ஸ்ரீ, மற்றும் குடும்பத்தினர்