புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணேசு பஞ்சலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 22/03/2021
கடவுளே கிடைத்தார் எனக்கு
வரமாக தந்தை உருவில்
சொந்தக் காலில் தனியாக
தலைநிமிர்ந்து நிற்கவிட்டு - தன்
வாழ்க்கை பயணத்தை முடித்து
கடவுளாகவே இருந்து ஆசிர்வதிக்க
விடைக்கொடுத்தார் அப்பா!!!
உன்னை நினைக்கும் போதெல்லாம்
எனக்கு ஆறுதல் சொல்ல வதுவது
கண்ணீர் மட்டும் தான்!!
உன் அன்பை தோற்கடிக்கும்
மற்றொரு அன்பை இவ்வுலகில்
யாரும் தரப்போவது இல்லை அப்பா
உன்னைத் தவிர!!!
தந்தையாக நீங்கள் - எனக்கு
காட்டிச் சென்ற அன்பை எல்லாம்
தாயாக திருப்பி தர முயற்சிப்பேன்
மகனாக நீ வேண்டு
மறுஜென்மத்தில் !!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய என்றும் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள்