யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் குமரகோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் ஜெகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் இனிய முகம்
காணாது ஆண்டொன்று ஆனதப்பா!!
நிஜமாய் கண்ட உம்மை
நிழற்படமாய் பார்க்கும் போது
எம் நெஞ்சம் விம்முகிறது...
அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்...
மீண்டும் வந்திடுங்கள் எங்களிடம் அப்பா!!!
அப்பா..! என்றழைக்க
எமக்கென்று இனி யாருமில்லையே?
உம்மிடத்தை நிரப்பிடவே
இந்த அகிலத்தில்
உமக்கிணையாய் யாருமில்லை அப்பா!!!
எங்கள் இதயத்தில் குடியிருக்கும் அன்பு தெய்வமே
உங்கள் ஆத்மா சாந்தி அடைய என்றும் பிரார்த்திக்கும்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி....... ஓம் சாந்தி .....ஓம் சாந்தி