யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசாலாட்சி துரைராஜா அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று இணுவிலில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம்(மாணிக்கர்) மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா தங்கம், தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிர்மலா(வவுனியா), கலைச்செல்வம், செல்லக்கிளி, கலையரசி(சுவிஸ்), தேன்மொழி, சிவலோகநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிற்றபேசன், சண்முகநாதன், திருவுளங்கம், கனகநாயகம் மற்றும் மீனாட்சி, மனோன்மணி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற நாகநாதன் மற்றும் அருந்தவமலர், விமலநாயகி, விநாயகமூர்த்தி(சுவிஸ்), ஸ்ரீபாஸ்கரன், பிருந்தா ஆகியோரின் மாமியாரும்,
நித்தியா, நிரூசன் (வவுனியா), துரேசன்(பிரான்ஸ்), சிவபாலன், சேந்தன்(MLT, Melsta Hospital - Colombo), சிவமயூரன், தேசிகன், சபீனா, துவாகரன், விதுசன், தமிழினி (சுவிஸ்லாந்து), கிஷோர், டிலோஜன், துஷைந்தன், துஷைந்தினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லதுர்னன் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-2-2021 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இணுவில் கிழக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிற்பகல்-02:00 மணியளவில் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.