யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் விஜயகாந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பண்புடனும்
பாசத்துடனும் வழி நடத்திய – எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா….
உன் சிரித்த முகமும் சிந்தனையான பேச்சும்
எம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை
திக்கெட்டும் தேடுகிறோம் உங்கள்
திருமுகத்தை ஒருமுறையேனும் காண
எமக்கு இப் புவியில்
உங்களை இழந்த துயர் நீக்க
இன்றுவரை யாரும் இல்லை அப்பா!
என்றென்றும்
உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!