யாழ். ஈவினை புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி இரத்தினம் ஜெயராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்காய் வாழ்ந்த உங்களை இழந்து
ஐந்தாண்டுகள் கடந்து விட்டதே!!!
கண்ணதனை இமையது காப்பது போல்
கருத்தோடு நீரிருந்து கலங்காது காத்தீர்
கலங்குகின்றோம் நீரின்றி உம் நினைவால்
எம்மோடு நீங்கள் என்றென்றும்
கூடவே இருக்கின்றீர்கள் என்று
இப்பூவுலகில் உளம் தளராது பயணிக்கின்றோம்!
என்றும் உங்களை நெஞ்சில் சுமப்போம்
நித்தியத்தில் இளைப்பாறுங்கள் அம்மா ...