யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கலிபோர்னியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை கீதபொன்கலன் அவர்கள் 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கலிபோர்னியாவில் நித்திய வீட்டில் இளைப்பாறினார்.'
அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, வரவணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராயப்பு, ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னமேரி(ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
வதனா(கலிபோர்னியா), வதனி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வலன்ரைன் செல்வா(கலிபோர்னியா) , இராயப்பு தேவதாசன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஷாயினி, பீட்டர் அக்ஷ்வின் ஆகியோரின் அருமை அம்மப்பாவும்,
காலஞ்சென்ற மேரி தெரேசா, தர்மநாயகி, செல்லத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செலஸ்தீன்பிள்ளை, காலஞ்சென்ற கிறிஸ்தோபர், மெலீற்றா, காலஞ்சென்ற திருச்செல்வம், பவுலப்பு, பத்திநாதர், ஜேசுதாசன், யோண்மேரி, லோரன்ஸ், மேரியன்னம், ஸ்கொலஸ்ரிக்கா, மத்தியூஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.