யாழ். காரைநகர் விக்காவில் ஆலடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் கல்லூரி வீதியை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை இராமநாதன் அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணை, செல்வி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
வாசன்(பிரித்தானியா), வாசுகி(ஆசிரியை- யா/ நவாலி அட்டகிரி சைவ வித்தியாசாலை), வனஜா(ஆசிரியை- யா/ மண்டைதீவு மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சயானி(பிரித்தானியா), ஜெயகுமார்(மொழிபெயர்ப்பாளர்- தெல்லிப்பழை பிரேதச செயலகம்), ரஞ்சித்(ரஞ்சித் மோட்டோர்ஸ் உரிமையாளர்- மானிப்பாய்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புஷ்பவதி, லலிதா, பத்மினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம், சரவணமுத்து, பன்னீருகரம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
பவிஷன், நவீனயா, சபீஷ், ரோகித் ஆகியோரின் அன்புப் பேரனும்,
எழிலாசினி, ரமணன், ரஞ்சித், பாமிதன், பார்த்திபன், பபிதா, காயத்ரி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.