யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wimbledon ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா வீரவாகு அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, வேதாத்தை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
வாகீசன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சபாநாதன், பாலசுப்பிரமணியம், அருளானந்தம் மற்றும் சிதம்பரநாதன்(கரவெட்டி), சர்வானந்தம்(லண்டன்), சாந்தினி- விக்னேஸ்வரலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துஷாந்தி அவர்களின் அன்பு மாமனாரும், அஸ்வினி, தருண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-08-2020 திங்கட்கிழமை முதல் 04-08-2020 செவ்வாய்க்கிழமை வரை பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.