யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், அரியாலை, சென்னை இந்தியா ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் புவனேஸ்வரராஜா அவர்கள் 03-08-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(ஆசிரியர்) சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
துசியந்தன், துசிதா, சசிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவாம்பிகை, அமுதராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செந்தில்ரதன், மதனரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஞானுஸ், அபூர்வா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தனபாக்கியம், நாகேந்திரன், காலஞ்சென்ற கனகலிங்கம், மீராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சந்திரா, பாஸ்கரன், சாந்தி, வசந்தி, பகீரதி, காலஞ்சென்ற பகீரதன், விக்னேஸ்வரன், விக்கினேஸ்வரி, பாஸ்கரி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
பிரியதர்சன், ஜனனி, நிலக்ஷன், நிலர்சினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜனனி, அஜி, கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.