யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், மருதங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் திரவியம் அவர்கள் 02-08-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வல்லி, லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வரதராசா, வசந்தராசா, மனோகரன், தர்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாளினி, ரசீலா, சுமித்திரா, சசிகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிருந்தா, பிரித்திகா, ஆகாஷ், அனுசன், டனுசியா, சஞ்சித், சஞ்சிகா, சஞ்சயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இராசலிங்கம், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், கனகலிங்கம் மற்றும் குணபாலு, ஜெயபாலு, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2023 வியாழக்கிழமை அன்று பருத்தித்துறை புலோலி மத்தி அவ்வொல்லையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.