யாழ். புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamburg Buxtehude ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மஞ்சுளா தனபாலசிங்கம் அவர்கள் 02-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராமலிங்கம்(ஓய்வுபெற்ற பொலீஸ் உத்தியோகத்தர் CID), காலஞ்சென்ற சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தனபாலசிங்கம்(தனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரமணன், சங்கீத் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாஸ்கரன்(டென்மார்க்), சரோஜினி(சரோ, சுவிஸ்), வசந்தகோகிலம்(வசந்தி, ஆசிரியை- இலங்கை), நிர்மலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகநாதன், காலஞ்சென்ற சரோஜினிதேவி, சிவலிங்கம், நரசிங்கமூர்த்தி(மூர்த்தி), சுதாஸ், ஜெயதேவன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சுவிந்தியா, சுவிசிந், லக்சன், நீலஜா, லதுசன், லக்சிகா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.