யாழ். வதிரி கரவெட்டி தாரிக்கபற்றைப் பிறப்பிடமாகவும், அல்வாய் தெற்கு சுந்தர் வளவு, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் தர்மலிங்கம் அவர்கள் 27-06-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாளபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன்(உரிமையாளர்- அக்ஷயா Food city), தசரதன்(லண்டன்), தமிழ்ச்செல்வன்(கனடா), ஸ்ரீதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலாதேவி(நெல்லியடி), காயத்திரி(லண்டன்), பாமதி(கனடா), கோபிநாத்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா சோமசுந்தரம், அன்னம்மா இராசையா, நாகம்மா சின்னதம்பி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சகுந்தலாதேவி வைத்தீஸ்வரன், காலஞ்சென்ற சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்மிதா, அக்ஷயன், துளாசிகா, அனனியா, சர்வின், தேஷ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.