யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது இந்தியா மதுரையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நீலாம்பாள் அவர்கள் 26-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி(சிங்கப்பூர்காரர்) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்(மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சித்திராதேவி(இந்தியா), மணிமாறன்(கண்ணன்- கனடா), காலஞ்சென்ற மணிவண்ணன், மணிசேகரன்(இந்திரன்- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மணிவாசகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கணேஷ், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான நடராசா, புனிதவதி மற்றும் குமாரவேல், தவமணி, காலஞ்சென்ற பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோபாலசிங்கம், சுபாகனி, விஜிதரா, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, பரமேஸ்வரன், சண்முகவடிவு, படியலிங்கம் மற்றும் மனோன்மணி, காலஞ்சென்ற சாந்தலிங்கம் மற்றும் யோகன், காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை(நாகேஸ்வரி), பரமலிங்கம், ஞானேஸ்வரி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகீர்தன், சுயந்தா, சுஷானி, கிஷன், நிஷானி, லக்ஷிகா, அர்ஜிந், பிரிந்திகா, நிசேவிதன், யாஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கபிசான், லித்திகாஷிரி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2020 சனிக்கிழமை அன்று மதுரையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.