யாழ். சங்கானை நிகர வைரவர் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Croydon ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா கணேசலிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஆறு போனாலும்
அழியாது நம் சோகம் மீளாது
எம் துயரம் மறையாது உங்கள்
நினைவு ஆறாத் துயரில்
ஆழ்த்தி விட்டு மீளாத்
துயில் கொண்டதேனோ!
எங்கள் வீட்டு நிலவாக ஒளி வீசி மகிழ
வைத்தீரே யார் கண்பட்டு மறைந்து போனீரோ?
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல நாங்கள்
உமைப்பிரிந்து தத்தளித்து மனம் ஆடுகின்றதே
எங்கள் துயரம் விதித்ததோர் விதியதால்
விண்ணகம் சென்றதைப் பொறுத்திட முடியுமோ?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
உங்களை ஒரு போதும் மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன் திருவடியில் சாந்திபெற
பிரார்த்திக்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்