யாழ். தெல்லிப்பழை சங்கானையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜரட்ணம் தவமணி அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:05/06/2023
அம்மா பதினான்கு ஆண்டுகள்
கரைந்ததம்மா உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு
இன்னும் கரையவில்லையம்மா....
அகலவில்லையம்மா! எங்களோடுதான்
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா...
அன்று எங்கள் அழுகையின்
அர்த்தம் புரிந்த அகராதி
புத்தகம் நீயம்மா இன்றோ அழுது புரண்டு
தவிக்கின்றோம் கேட்கவில்லையாம்மா...
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உன்னை போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையம்மா
இவ் உலகில்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்...
தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்