யாழ். சுன்னாகம் கடவைப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தங்கராஜா அவர்கள் 02-06-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இளையப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளா, செந்தூரன், சந்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அயந்தன், சகானா ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,
அஸ்வினி, அக்ஷரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், தியாகராஜா, ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மணிமேகலை, மங்கயற்கரசி, சறோஜினிதேவி, மற்றும் இரகுநாதன், மனோன்மணி, பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.