யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Reggio Emilia வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செபஸ்தி அன்ரனி லூர்த்தம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கருவறையில் சுமந்தெம்மைக் காத்து வளர்த்தெடுத்து
உயர்வாக எம்மை இந்த உலகினிலே வாழவைத்தாய்!!
நிறைவான வாழ்வுகண்டு நிம்மதியாய்த் துயில் கொண்டாய்
மறைவாக நின்றாலும் வாழ்கின்றாய் எம்மோடு!
ஆண்டொன்றைக் கடந்துவிட்டோம் அம்மா!
உனைப் பிரிந்து மீண்டும் உனைக் காண்பதற்கே
விரைகிறது எங்கள் மனம்.
உறவுகள் எத்தனை ஆயிரம் இருந்தும் என்ன
அம்மா என்று சொல்ல யார் எமக்கு உண்டு?
என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்
அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம்