யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், உடப்புசல்லாவ, பிரித்தானியா Blackheath ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசரத்தினம்(நல்லூர்) கெளரி(வட்டுக்கோட்டை) தம்பதிகளின் பாசமிகு மகளும், அருளாநந்தம் மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளானந்தம் சிவப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தி, சுகந்தி ஆகியோரின் பாசமிகு அருமை அம்மாவும்,
காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன், சிறீகந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், தனபாலசூரியர், ராசமணி, பாலசிங்கம், சோதிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவராஜ், சிவசோதி, கனகாம்பிகை, கமலாம்பிகை மற்றும் சரஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும், Dr. சாய், ஜெசிந்தன், Dr. கிருஷ்னி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
ஈதன், ஈலாயஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும். செல்வம் அவர்களின் வளர்ப்புத் தாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.