யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு சாந்தையைப் பிறப்பிடமாகவும் மற்றும் சுவீடன் Helsingborg ஐ வதிவடமாகவும் கொண்ட திருமதி நாகரத்தினம் செல்லத்துரை அவர்களின் 1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
அனைவரிடத்திலும் அன்போடும், பண்போடும்
பாசத்தோடும், கடமை, கண்ணியம்,
கட்டுப்பாட்டுடன் நல்வழிகாட்டி எங்களை
வளர்த்தெடுத்த எமதருமை அம்மாவே!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்க முடியாது
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
எங்கள் இதயங்களிலிருந்து
அகலாது உங்கள் நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!