யாழ். வேலணை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 4ம் குறுக்குத்தெரு, கொழும்பு 15 பள்ளிவாசல் வீதி மோதரையை வதிவிடமாகவும், யாழ். சுண்டுக்குளியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன் அமிர்தலிங்கம் அவர்கள் 12-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வீரலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சித்திரபானு(டென்மார்க்), சுபாஜினி(சுவிஸ்), சுபாகரன்(லண்டன்), சுதாகரன்(பிரான்ஸ்), சுதாஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சபாரட்ணம்(காந்தி- யாழ்ப்பாணம்), பொன் தியாகராஜா(பொன் அண்ணா- டென்மார்க்) மற்றும் பொன் சந்திரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.