யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலக்ஷ்மி இராமசாமி அவர்கள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கதிராமர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற கதிராமர் இராமசாமி(Rtd Superintendent, Railway stores, Sri Lanka) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுகந்தி விஜயகுமார், சகுந்தி சிறீ ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மயில்வாகனம் விஜயகுமார் (பன்னாலை/லண்டன்), முருகையா சிறீ ராஜ்குமார் (தெல்லிப்பழை/லண்டன்) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.