யாழ். சிந்துபுரம் வட்டுக்கோட்டை மேற்கை பூர்வீகமாகவும், கொழும்பை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆங்கில மொழியில் கற்றுத் தேர்ச்சி பெற்ற நறுமலர்த்தேவி பொன்னையா அவர்கள் 01-06-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா ஆசைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சங்கீதபூசணம் செல்லப்பா பொன்னையா அவர்களின் பாசமிகு மனைவியுமாவார்,
2001ம் ஆண்டளவில் பிரான்ஸிற்கு வருகை தந்தவர் தனது பூட்டப் பிள்ளைகள் வரை ஆசி வழங்கி நேசங்களோடு கூடிக்குலாவி வாழ்ந்தவராவார்.
காலஞ்சென்றவரான அமரர் சங்கீதபூசணம் செல்லப்பா பொன்னையா அவர்களை வட்டுக்கோட்டையில் திருமண பந்தத்தில் இணைந்தவராவர்.
காலஞ்சென்ற முதற்புதல்வி லலிதா மற்றும் குமாரவல்லி அருளழகன்(ரதி- பிரான்ஸ்), காணாமற் சென்ற குகதாசன், ரவிதாசன்(ஜேர்மன்), காலஞ்சென்ற ஞானவவல்லி கார்த்திகைபாலன், புவிதாசன்(பிரான்ஸ்) மற்றும் காலஞ்சென்ற அழகேசன்(பிரான்ஸ்), பொன்மலர்(பிரான்ஸ்) மற்றும் குமுதவல்லி குசலவன்(வித்தியா- பிரான்ஸ்), தோதனன் ஆகியோரின் பாசமிகு தாயுமாவார்,
அன்னாரின் கணவரான சங்கீதபூசணம் செல்லப்பா பொன்னையா 1996 ம் ஆண்டளவில் அவர் தமிழகத்திற்குச் சென்றவேளை பயணத்தில் காலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சங்கீதபூசணம் என மதிப்பளிக்கப்பட்டவரான காலம்சென்ற செல்லப்பா பொன்னையா அவர்களின் அன்புத் துணைவியாவார். கலைவாழ்வின் உயர்வுக்காகதன் துணைவனுக்காக வாழ்ந்தவர். மேலும் கலைகற்ற மண்ணிலே தனதுயிரையும் துறந்தவரான செல்லப்பா பொன்னையாவின் அன்புத் துணையாள் பதினாறு பிள்ளைகளைப்பெற்ற தாயார் எனப் புகழாரம் சூட்டப்பட்டவராவர்.
அருணகிரிநாதன், பேரின்பநாயகி ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து, நாகமணி, வேலுப்பிள்ளை, பாக்கியமுத்து, குமாரசாமி, ஆசையமுத்து, சதாசிவம் ,சதானந்தசிவம் மற்றும் அற்புதவதனி ஆகியோரின் கருணைமிகு மைத்துனியும்,
அருளழகன், சரோஜா, மஞ்சுளா, கார்த்திகைபாலன், அரியமலர், குசலவன், சிவலோசினி ஆகியோரின் பற்றுமிக்க மாமியாரும்,
அனுஜனா- வதனன், அனுஜெயந்தன்- சிவஅனுசா, அஜந்தன்- சயந்தினி, அபர்ணா-தக்சன், சாயீசன், ஜெயசுயா, மஞ்சிகா, அபிர்தன், பைரவி, புவிதர்சன், கார்த்தியாயினி, அரிகேசினி-தினேசன், றோசன், மனோச், குவிந்தன், பிரசாந், ஜதுர்சன், ஜஸ்வின்யா, தாவீது, மரி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
வயன், அய்யனா, அதியன், ஜெய்தன், அனிசா, மயூரன், அலன் ஆகியோரின் நேசமிகு பூட்டியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.