யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lüdenscheid ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனம்ஜெயசிங்கம் பரராசசேகரன் அவர்கள் 02-06-2022 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
சென்ற் ஜோன்ஸ் (St. John’s) கல்லூரியின் பழைய மாணவனும், 32 வருடகாலமாக பிரபல்யமான வாகன உதிரிப்பாக தொழிற்சாலையில் பணியாற்றியவரும் (KOSTAL), Altena-Lüdenscheid தமிழர் விளையாட்டுக் கழகத்தின் (A.L.T.S.C) பணிமுதல்வரும், 35 வருடகாலமாக அன்றுமுதல் இன்றுவரை தமிழ்த்தேசியத்துக்கு தன்னை அர்ப்பணித்துகொண்டவரும், லூடன்சைட் தமிழாலய நிர்வாகியும் ஆவார்.
அன்னார், காலஞ்சென்ற தனம்ஜெயசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, அரியமலர்(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் அருமை மருமகனும்,
றீனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிலக்ஷி அகல்யா அவர்களின் அன்புத் தந்தையும்,
தயாநிதி(கல்கி) பொன்னையா அவர்களின் அன்பு மாமனாரும்,
தியா லக்ஷ்மிகா, சீதா தேவிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஜெயக்குமார்- கௌரி(ஜேர்மனி), ரேவதி- குலேந்திரன்(பிரான்ஸ்), ஞானசேகரன்- சுலோசனா(கனடா), குணசேகரன்- றாதிகா(கனடா), பத்மசேகரன்- பேபி(லண்டன்), குலசேகரன்- கலா(ஜேர்மனி), புனிதவதி- தனம்ஜெயசிங்கம்(கனடா), ராசசேகரன்- கேசுகி(ஜேர்மனி), சந்திரசேகரன்- துஷாரிகனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மைத்துனரும்,
ராஜகுமார்- பத்மினி(அவுஸ்திரேலியா), ராஜினி- லோகன்(லண்டன்), றவீந்திரகுமார்- லதா(கனடா), றஞ்சிற்குமார்- நிலானி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.