யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon, Bobigny, பிரித்தானியா London, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ருக்குமணி வரதராசா அவர்கள் 20-05-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் கணபதிப்பிள்ளை(வெள்ளவத்தை) தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், அன்னமுத்து(வெள்ளவத்தை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் வரதராசா(Lyon- பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சன்(சுதன்), சுதர்சினி(லுகிர்தா), சுபோதினி(சுபோ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி இராஜசிங்கம்(தொல்புரம், பிரான்ஸ்), செல்வராசா வேலாயுதம்(சுழிபுரம் கிழக்கு- பிரான்ஸ்), காலஞ்சென்ற பூமணி வேல்(கனடா), துரைராசா வேலாயுதம்(சுவிஸ்), காலஞ்சென்ற பரயோகமணி முருகமூர்த்தி(ஆச்சி- கனடா), விக்கினராசா வேலாயுதம்(அப்பு- வெள்ளவத்தை), தியாகராசா வேலாயுதம்(ராசு- நோர்வே), ஜமுனா யோகநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகேஷ்வரி ஆறுமுகம்(சுழிபுரம்), கார்த்திகேசு(வெள்ளவத்தை), பரமேஸ்வரி நடராசா(நீர்வேலி), காலஞ்சென்றவர்களான முருகமூர்த்தி(சுழிபுரம்), சிவபாதம்(சுழிபுரம்), விசாகரட்ணம்(சுழிபுரம்), காலஞ்சென்ற உரித்திரமூர்த்தி ஆகியோரின் மைத்துனியும்,
ராஜி, ஸ்ரிவன் ஆகியோரின் அன்பு மாமியும்,
ஸ்வேத்தா, ரெபேக்கா, கார்த்திக், மலேக்கா, அலாறிக், ரேய்டன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.