யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாரதாம்பாள் நுட்பநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா! ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து ஓராண்டாம்!
உமைப் பிரிந்து ஒரு் யுகம்போல் தோன்றுதம்மா!
பல நாள் ஊனுறக்கம் மறந்தோம்!
அழுதழுது ஓய்ந்ததம்மா எம் விழிகள்
உங்களைக் காண்பதற்கு ஒருமுறை வருவீர்களா!
நினைத்துப் பார்க்கு முன்னே
நினையாமல் போனதென்ன!
நிலையில்லா வாழ்வுதனை எமக்குரைக்கவா!
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டீர்களா!
எங்கள் இதயத்துடிப்பில அன்பு கொண்ட உங்கள் முகம்
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்!
தாயாய் உதித்த எங்கள் பாசவிளக்கு...
அள்ளி எடுத்து அரவணைத்த அன்புத் தாய்
பார்விட்டு அகன்று ஓராண்டு ஓடியது
கார்மேக கூட்டமாய் கலையாது உங்கள் நினைவுகள்
காலம் கடந்தும் வாழும் உங்கள் ஞாபகங்களுடன்....
அன்புக் குடும்பத்தினர்