யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராசா றொமேஸ் அவர்கள் 11-04-2022 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயராசா, புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயராஜன் இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டயானி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜஸ்வந்த் அவர்களின் பாசமிகு தந்தையும்,
கிஜிதா, சஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டக்சியா, டக்சன், டனுசன், டக்சனா, சுரேஸ்வரன், தவேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பற்குணா அவர்களின் சகலனும்,
மிதுசா, ஜிதுசன், சற்குரு, ஆதிஸ், அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெய்னிக்கா, ஜெய்சனா, ஜெய்னயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.