யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி நடராஜா அவர்கள் 15-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மாணிக்கம், தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
மில்சிறீ, கலா, மோகன்(பிரான்ஸ்), மாலா(பிரித்தானியா), நேசன்(பிரித்தானியா), டெய்சி(பிரித்தானியா), நிதி(பிரித்தானியா), சோதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் முதலியார் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.